தாய்ப்பால் என்பது
அரிய உணவு. அதிசய உணவு. தாய்ப்பாலை போதுமான அளவுக்கு குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக மட்டுமல்ல, அறிவாற்றலிலும் உச்சத்தை தொடுவார்கள். எனவே தான் தாய்ப்பாலை தானத்தை விட உயர்ந்ததாக கருதுகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டே பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுக்க
வேண்டும் என்பதை உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த (ஆகஸ்டு
1-ந் தேதி) முதல் ஒரு வாரத்துக்கு உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.
மேலைநாடுகளில் பெண்கள்
தங்கள்
மார்பக
அழகு போய்விடும் என்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை. சமீப காலமாக இந்திய பெண்களும் இதே மன நிலைக்கு மாறி இருப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் சத்து கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டு பிடித்துள்ளனர்
கொலஸ்ட்ரம்' எனும் பால் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொண்டது. தாய்ப்பாலுக்கு இணையாக எந்த செயற்கை முறையிலும் ஈடு செய்து தயாரிக்க முடியவில்லை என்பதே தாய்ப்பாலின் சிறப்பு.
தாய்ப்பால் குழந்தைக்கு,
- ஒரு முழு உணவு
- எளிதில் ஜீரணம் ஆகும்
- குழந்தை தாடை வலுப்படும்
- குடல், வயிறு வலி இருக்காது
- சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்
- அபார நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்
- குண்டாக உடல் உருவாவதைத் தடுக்கும்
- குழந்தையின் கவனிக்கும் திறன் கூடும்.
- நல்ல மனநலம் உருவாகும்
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பெறும்
நீண்ட கால பலன்கள்
- அலர்ஜி இவர்களை அதிகம் தாக்குவதில்லை
- மார்பக புற்றுநோய் வாய்ப்பு மிகவும் குறைவு
- இருதய நோய் பாதிப்பு குறைவு
- புத்தி கூர்மை இருக்கும்.
- கர்ப்பபை நன்கு சுருங்கும்
- மார்பக புற்று நோய் அபாயம் குறைவு.
- மனச்சோர்வு, மன உளைச்சல் இருக்காது.
- எலும்புகளின் தேய்மானம் நன்கு கட்டுப்படும்.
- தாய், சேய் புனித உறவு மேம்படும்.
- செலவு இல்லை.
- நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.
No comments:
Post a Comment