Monday 25 August 2014

வாழ்க்கை மிக கடினம்




பிறந்த உடன்  என்ன குழந்தை 

ஆனா  பெண்ணா ?

வளர்ந்த உடன் என்ன படிக்குற ?

படிச்சு முடிக்கும் போது எப்ப 

வேலைக்கு போவ ?

வேலைக்கு போன உடன் 

எப்ப கல்யாணம் ?

கல்யாணம் ஆன உடன் 

குழந்தை  எப்ப?

இன்னும் இல்லையா ?

டாக்டர் ட போனியா ?இல்லையா ?

இருந்தா என்ன படிக்கவைக்க போற ?

இது தான் சமூகம் அவர்கள் கேள்வி 

மட்டும் தான் கேப்பார்கள் 

அவர்களுக்காக நாம் வாழாமல் 

நமக்காக வாழ  வேண்டும் 

Tuesday 19 August 2014

சீசரியன்

சுகமான பிரசவமில்லாது தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர்




ஜூலியஸ் சீசர் 
கிமு 100ல் வாழ்ந்த ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார்.




அதனால்தான் இந்த பிரசவ முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர்

Sunday 17 August 2014

Benefits Of Drinking Warm Lemon Water:




Benefits Of Drinking Warm Lemon Water:
Start the day out with a mug of warm water and the juice of half a lemon.
It's so simple and the benefits are just too good to ignore. Warm water with lemon:

1. Boosts your immune system
2. Balances pH
3. Helps with weight loss
4. Aids digestion
5. Acts as a gentle, natural diuretic

6. Clears skin

Saturday 16 August 2014

கல்யாண்த்தை ஏன் ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க?

 "ஒரு பயிர நட்டு அறுவடை முடிய அதிகபட்சம் ஆறு மாசங்காலம் ஆகும்.அதனால் எல்லா பயிருக்கும் அதிகப்ட்சம் ஆயுசு ஆறு மாசந்தான். ஆனா கல்யாணம் நீண்ட கால உறவு.
அது ஆயிரம் வருஷம் நீடிக்கக்கூடிய உறவுங்கிறதால அதை ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க.

உங்கள் துணையை மனதில் இருந்து காதல் செய்யுங்கள் .





காதலிக்கவோ,திருமணம் செய்யவோ சரியான நபரை கண்டு பிடிப்பது  சுலபம்தான் .ஆனால்,வாழ்நாள் முழுவதும் அந்த நபருடன் ,அதே காதலுடன் வாழ கற்று கொள்வதுதான் கஷ்டம் .அந்த வித வித்தை உங்களுக்கு கைவர .


துணையை மாற்ற  முயற்ச்சிக்காமல் அவரை அப்பிடியே  ஏற்றுக் கொள்வதும் காதலிப்பதும் மட்டுமே போதுமானது.


உங்கள்  துணையை உங்களது நெருங்கிய நண்பர்கள் போல நடத்துங்கள் .நல்ல நட்பிடம் பகிர்ந்து கொள்ளகூடிய அனைத்தும் உங்கள் துணையுடன்  பகிர்ந்து கொள்ளுங்கள் .


இதை போய் எப்படி சொல்றது என  தயங்காமல் உங்கள் எண்ணங்கள்,ஆசைகள்,கனவுகள்,போராட்டங்கள் என அனைத்தும் துணையுடன் பகிருங்கள்.

உங்கள் துணையை எக்காரணம் கொண்டும் யாருடனும் ஒப்பிட்டாதீர்கள்.அது உங்கள் மீதும் அவர்கள் மீதும் வெருப்பை உண்டாகும்.

ஏதோ ஒரு காரணத்தால் தான் உங்கள் துணையை  ஏற்றுக்கொண்டு இருப்பிர்கள்.அதை நினைத்து சந்தோஷமாக  இருங்கள்.

சின்ன சின்ன விஷயங்களை மனதில் நினைத்து உங்கள்   உறவை கெடுத்து கொள்ளாதிர்கள்.


நம வாழ்க்கை நாம் பார்த்துகொள்வோம்  ஏன் அனுசரித்து போக வேண்டும் என நினைக்காமல் நம் பெரியோர்கள் சொல்வது போல கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்பதை மனதில் வைத்து உங்கள் துணையை மனதில் இருந்து காதல் செய்யுங்கள் .



உங்கள் திருமண  வாழ்க்கை  வெற்றியோடு இருக்கும்.

Wednesday 6 August 2014

தினமும் தலைக்கு குளிப்பது கூந்தலுக்கு நல்லதா?



ஷாம்புக்களில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் அவை தலைமுடிகளிலும் மயிர்க் கால்களிலும் உள்ள தேவையான எண்ணெய்களை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்துவிடும். இது கூந்தலுக்கு நல்லதல்ல. எனவே வாரத்திற்கு 3 முறை தலைமுடியைக் கழுவினால் போதும். அதிலும் சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது.


• எண்ணெய்த் தன்மையுள்ள பொடுகுகளை நீக்க, ஆலிவ் எண்ணெயில் தலைமுடியை 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, அதற்குப் பின் சூடான டவல் கொண்டு சுற்றிக் கொண்டு, பின்னர் முடியைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், இஞ்சிச் சாற்றை உச்சந்தலையில் தேய்த்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முடியைக் அலசுவதும் நல்லது. மேலும் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு தேய்த்து 2 நாட்களுக்கு ஒருமுறை தலைமுடியைக் கழுவுதல் நலம். 


• தலைமுடிக்கு ஹென்னாவை உபயோகிப்பதால், அது வறண்டு தான் அதற்குப் பதில் தரமான கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது சிறந்தது. 


• தலைமுடிகளை மிருதுவாக்க ஹேர் சீரம்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது. ஓரிரண்டு துளிகளை மட்டுமே எடுத்து முடிகளில் சீராகத் தடவினாலே போதும். 


• ஹேர் ஸ்பா செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், இயற்கை வழிகளையே நாடுங்கள். செம்பருத்திப் பூவை நன்றாக அரைத்து முடிகளில் தடவுவது நல்லது. அது முடியை நன்கு கருமையாகவும், வலுவாகவும் வளரச் செய்யும். 


மேலும் இரும்புச்சத்து அதிகமுள்ள மருதாணி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த வேம்பு ஆகியவையும் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதே போல் முடி அலர்ஜிக்கு கற்றாழை மிகவும் நல்லது. முடிகளில் கலர் செய்திருப்பவர்கள், வெண்ணெயை உபயோகிக்கலாம்.

பெண் (படித்ததில் பிடித்தது)

                                                 பெண்


ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ,
பரிசுப் பொருட்களையோ அல்ல.

அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்

உங்களுடைய நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்
என்பதைத்தான்.! 


ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !


இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !



இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !



இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !



இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !



இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !

Tuesday 5 August 2014

DRINK WATER ON EMPTY STOMACH

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:

Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.

METHOD OF TREATMENT 

1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute

3.. After 45 minutes you may eat and drink as normal.

4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:
1. High Blood Pressure (30 days)
2. Gastric (10 days)
3. Diabetes (30 days)
4. Constipation (10 days)
5. Cancer (180 days)
6. TB (90 days)
7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards – daily..

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times. 
It is better if we continue this and make this procedure as a routine work in our life. 

Drink Water and Stay healthy and Active.          

Friday 1 August 2014

உலக தாய்ப்பால் வாரம் - ஆகஸ்டு 1

தாய்ப்பால் என்பது அரிய உணவு. அதிசய உணவு. தாய்ப்பாலை போதுமான அளவுக்கு குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக மட்டுமல்ல, அறிவாற்றலிலும் உச்சத்தை தொடுவார்கள். எனவே தான் தாய்ப்பாலை தானத்தை விட உயர்ந்ததாக கருதுகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டே பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த (ஆகஸ்டு 
1-ந் தேதி) முதல் ஒரு வாரத்துக்கு உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.

மேலைநாடுகளில் பெண்கள் தங்கள் மார்பக அழகு போய்விடும் என்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை. சமீப காலமாக இந்திய பெண்களும் இதே மன நிலைக்கு மாறி இருப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் சத்து கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டு பிடித்துள்ளனர்

கொலஸ்ட்ரம்' எனும் பால் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொண்டது. தாய்ப்பாலுக்கு இணையாக எந்த செயற்கை முறையிலும் ஈடு செய்து தயாரிக்க முடியவில்லை என்பதே தாய்ப்பாலின் சிறப்பு. 

தாய்ப்பால் குழந்தைக்கு,
  • ஒரு முழு உணவு 
  • எளிதில் ஜீரணம் ஆகும் 
  • குழந்தை தாடை வலுப்படும் 
  • குடல், வயிறு வலி இருக்காது 
  • சர்க்கரை நோய் பாதிப்பு குறையும் 
  • அபார நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் 
  • குண்டாக உடல் உருவாவதைத் தடுக்கும் 
  • குழந்தையின் கவனிக்கும் திறன் கூடும். 
  • நல்ல மனநலம் உருவாகும்


தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பெறும் நீண்ட கால பலன்கள் 
  • அலர்ஜி இவர்களை அதிகம் தாக்குவதில்லை 
  • மார்பக புற்றுநோய் வாய்ப்பு மிகவும் குறைவு 
  • இருதய நோய் பாதிப்பு குறைவு 
  • புத்தி கூர்மை இருக்கும். 
தாய்ப்பால் கொடுக்கும் தாய் பெறும் பயன்கள் 
  • கர்ப்பபை நன்கு சுருங்கும் 
  • மார்பக புற்று நோய் அபாயம் குறைவு. 
  • மனச்சோர்வு, மன உளைச்சல் இருக்காது. 
  • எலும்புகளின் தேய்மானம் நன்கு கட்டுப்படும். 
  • தாய், சேய் புனித உறவு மேம்படும். 
  • செலவு இல்லை. 
  • நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.